தேயிலைத்தோட்ட பகுதிகளில் பழைய கால்பந்து விதிமுறைகள்
1. நடுவர் இல்லை.
2. வீரர்கள் சோர்வாகும் வரை, அல்லது சூரிய அஸ்தமனம் ஆகி பந்து, கண்ணுக்கு புலப்படாத, வரைக்கும் விளையாட்டு தொடரும்.
3. ஸ்கோர் 23-22. வரையோ , அதை தாண்டியோ போய்க்கொண்டிருக்கும்
4. ஒரு வீரர் கடவுள் மீதும் , அம்மாமீது சத்தியம் செய்தால் பெனால்டி வழங்கப்படும்.
5. குண்டான நபர் கோல்கீப்பராக செயல்படுவார்
6. பந்தின் உரிமையாளர் கோபமடைந்து, அவர் பந்தை எடுத்துக்கொண்டால், ஆட்டம் முடிந்துவிடும்
7. அனைவரும் ஒப்புக்கொண்டால் ஃபவுல்ஸ் கணக்கிடப்படும்
8. யாரவது ஃபுட்பால் பூட் அணிந்து வந்தால் , அவர்களை விளையாட அனுமதிப்பதில்லை
9. அணிகள் சமமாக இல்லாவிட்டால் கூடுதல் வீரர் அனுமதிக்கப்படுவார்
10. பெனால்டி கிக் போது கோல்கீப்பரை மாற்றிக்கொள்ளலாம்
11. பந்து கிராஸ்பாரை தாண்டிச் சென்றால், அது கோலா இல்லையா என்பதைப் பற்றி விவாதிக்க ஆட்டம் அரை மணி நேரம் இடைநிறுத்தப்படும்
12. பந்தின் உரிமையாளர் வலுவான அணிக்காக விளையாடுவார்
இந்த அழகான பொக்கிச நினைவுகளில் வாழ்ந்த அனைவருக்கும் வணக்கம்..
Comments
Post a Comment