Skip to main content

Posts

அழகிய கொடைக்கானலை கண்டுபிடித்தவர்கள் ஆங்கிலேயர்கள்

 அழகிய கொடைக்கானலை கண்டுபிடித்தவர்கள் ஆங்கிலேயர்கள்.. 1800 களில் கோடை வெப்பத்தை தாங்க முடியாத ஆங்கிலேயர்கள் குளிரான பகுதியை கண்டுபிடிப்பதற்காக பி.ச. வார்ட் என்ற ஆங்கிலேயரை தமிழ்நாட்டின் தென்பகுதிக்கு அனுப்பி வைத்தனர் அவர் பழனி மலைத் தொடரின் பெயரிடப்படாத ஒரு பகுதியை கண்டறிந்தார்... இதற்கு முன்பே இங்கு பல நூறு ஆண்டுகளாக பளியர் இன மக்கள் வாழ்ந்து வந்தனர் அவர்கள் மலைப்பகுதிகளில் விளையும் கிழங்கு மற்றும் காய்கறிகளை கீழே உள்ள பெரியகுளம் பகுதிக்கு வந்து விற்று விட்டு செல்வார்கள்... அது ஒரு ஒத்தையடி பாதை அந்தப் பாதையின் வழியாக 1821 ஆம் ஆண்டு தனது ஆய்வை தொடங்கினார் வார்ட் பெரிய குளத்தில் இருந்து கும்பக்கரை வழியாக ஏழு கிலோ மீட்டர் தொலைவுக்கு மேலே சென்றவுடன் வெல்லக்கவி என்ற கிராமம் வந்தது அதுதான் ஆங்கிலேயர்கள் கால் பதித்த இன்றைய கொடைக்கானலின் முதல் பகுதி. அங்கிருந்து டால்பின் நோஸ் என்கிற ஒரு பகுதி உள்ளது அந்த வழியாக அவர் சென்ற இடம்தான் இன்றைய கொடைக்கானல் அந்தக் குளிர் அவருக்கு மிகவும் பிடித்துப் போக அங்கேயே தங்கி விட்டார் அவர் தங்கியது மட்டுமல்லாமல் இந்த சூழல் மிகவும் அழகாக இருக்கிறது என்று ப...
Recent posts

வால்பாறை... இதுதான் எனது சொந்த ஊர்.

 வால்பாறை... இதுதான் எனது சொந்த ஊர். வால்பாறையின் அருகிலுள்ள அழகான தேயிலைத் தோட்டங்கள் சூழ்ந்த ஒரு சிறிய கிராமம் (எஸ்டேட்) தான் என் ஊர். நான் பிறந்ததும், வளர்ந்ததும், என் வாழ்க்கையின் முதல் அத்தியாயங்கள் அனைத்தும் இங்குதான். எனது குழந்தைப் பருவம், ஆரம்பக் கல்வி, உயர்நிலைப் பள்ளிப் படிப்பு என என் வாழ்க்கையின் இனிய நினைவுகள் அனைத்தும் இந்த மண்ணோடு பின்னிப் பிணைந்திருக்கின்றன. அந்த எஸ்டேட் வாழ்க்கையில் எண்ணற்ற நினைவுகள் நிறைந்துள்ளன. என் குழந்தைப் பருவத்தின் இனிமையான தருணங்களும், மறக்க முடியாத அனுபவங்களும் அந்த எஸ்டேட் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்திருக்கின்றன. பொதுவாக எஸ்டேட் வீடுகள் வரிசையாக அமைந்திருக்கும். ஒரு வரிசையில் கிட்டத்தட்ட ஐந்து வீடுகள் ஒன்றோடு ஒன்று ஒட்டியபடி இருக்கும். அதனால், அங்கு வசிக்கும் குடும்பங்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போல அன்புடனும், ஒற்றுமையுடனும் வாழ்ந்து வந்தனர். சராசரியாக ஒரு எஸ்டேட் பாடியில் சுமார் இருபது குடும்பங்கள் வசித்து வந்தனர். அந்தச் சிறிய சமூகத்தில் அனைவரும் ஒருவருக்கொருவர் உறவினர்களைப் போல அக்கறையுடனும், பாசத்துடனும் பழகினர். எந்த நல்ல...

தேயிலைத்தோட்ட பகுதிகளில் பழைய கால்பந்து விதிமுறைகள்

 தேயிலைத்தோட்ட பகுதிகளில்  பழைய கால்பந்து விதிமுறைகள்    1. நடுவர் இல்லை. 2. வீரர்கள் சோர்வாகும் வரை, அல்லது சூரிய அஸ்தமனம் ஆகி பந்து, கண்ணுக்கு புலப்படாத, வரைக்கும் விளையாட்டு தொடரும். 3. ஸ்கோர் 23-22. வரையோ , அதை தாண்டியோ போய்க்கொண்டிருக்கும்  4. ஒரு வீரர் கடவுள் மீதும் , அம்மாமீது சத்தியம் செய்தால் பெனால்டி வழங்கப்படும். 5. குண்டான நபர் கோல்கீப்பராக செயல்படுவார் 6. பந்தின் உரிமையாளர் கோபமடைந்து, அவர் பந்தை எடுத்துக்கொண்டால், ஆட்டம் முடிந்துவிடும்  7. அனைவரும் ஒப்புக்கொண்டால் ஃபவுல்ஸ் கணக்கிடப்படும்  8. யாரவது ஃபுட்பால் பூட் அணிந்து வந்தால் , அவர்களை விளையாட அனுமதிப்பதில்லை  9. அணிகள் சமமாக இல்லாவிட்டால் கூடுதல் வீரர் அனுமதிக்கப்படுவார்  10. பெனால்டி கிக் போது கோல்கீப்பரை மாற்றிக்கொள்ளலாம்    11. பந்து கிராஸ்பாரை தாண்டிச் சென்றால், அது கோலா இல்லையா என்பதைப் பற்றி விவாதிக்க ஆட்டம் அரை மணி நேரம் இடைநிறுத்தப்படும் 12. பந்தின் உரிமையாளர் வலுவான அணிக்காக விளையாடுவார் இந்த அழகான பொக்கிச நினைவுகளில் வாழ்ந்த அனைவருக்கும்  வணக்கம்..

மழை ஆரம்பிச்சாவே... இந்த இடம் சொர்க்கமா மாறிடும்...

 தேயிலை தோட்டங்கள்ல அழிஞ்சது போக... மிச்சம் இருக்கற குட்டிக் காடு, இந்த தலநார்... வால்பாறைல இருக்கு... மழை ஆரம்பிச்சாவே... இந்த இடம் சொர்க்கமா மாறிடும்... வனவிலங்களோட நடமாட்டமும் இருக்கு... பெருசா tourist placeனு தெரியாததால, மக்கள் விட்டு வெச்சிருக்காங்க... லேசா ஒரு தூரல் விழுந்தாவே... இங்க அட்டைகள் படையெடுக்கும்... அதெல்லாம் பார்த்தா, இந்த அழகை அணைக்க முடியுமா??? மழைப் பருவம் ஆரம்பிச்சிடுச்சு... சீக்கிரம் கிளம்பிடணும்🥰 நீங்களும் இப்படி ஒரு குட்டி சொர்க்கத்தை பார்த்து கரைய வர்றீங்கனா... தயவு செய்து பாலிதீன் குப்பைகளை போடாம, பாட்டில்களை வீசாம, புகைப் பிடிக்காம, முக்கியமா, இங்க இருக்கற செடி கொடி மரங்களையோ... விலங்குகள், பறவைகளையோ தொந்தரவு பண்ணாம... அமைதியா வந்துட்டு போங்க... இயற்கையை ரசிங்க... அதோட இயல்பை மாத்தாம🥰❤️

வால்பாறை எங்களுக்கு சொர்க்கம்

 வெள்ளை சட்டை காக்கி அரைக்கால் ட்ரவுசர் எண்ணெய் தேய்த்து தலை வாரி, நெற்றியில் விபூதி  பிஞ்சு விரல்களில் மருதாணியிட்டு, மஞ்சள் பையில் ஒற்றை சிலேட்டுடன், காலணி அணிய வைத்து கல்லும் கல்லும்  கலந்த பாதையில் ஓடியாடி விளையாடி கால் நோகாதிருக்க கண்கள் ஆங்காங்கே இருந்த  தேயிலை செடி ஊர் தெரியும் வேலிச் செடிகள்  கொழுந்து ஏற்றி செல்லும் டிராக்டர் புல்லட்டில் செல்லும் மேலாளர்கள் அதிகாரி ஐயா மாமன், அப்பா மேஸ்திரிகள் அண்ணன் சூப்பர் வைசர்கள், குண்டு விளையாட்டு வேண்டாம் மிரட்டும் மாமா க்கள்   கடையில் இருக்கும் எம்ஜிஆர் சிவாஜி மற்றும் பல நடிகர்களின் காலண்டர்கள் சாமி போட்டோக்கள் சினிமா கொட்டாய்களில் போடப்படும் சினிமா போஸ்டர்கள் மரங்கள் உழைக்கும் உணர்வாலர்கள் கண்டுரசித்தபடியே பள்ளிக்குச் செல்லும் நாட்கள்  அப்பாவிற்கு தெரியாமல் அம்மா கொடுக்கும் எட்டனா. அம்மாவுக்கு தெரியாமல் அப்பா கொடுப்பார் எட்டனா. ஆக மொத்தம் ஒரு ரூபாய். இடையில் அண்ணன், அக்காவிடமும்  அடேங்கப்பா ஏகப்பட்ட சந்தோசம். பள்ளிக்கு அருகில் பஜார்  டீ கடை. ஐஸ் சைக்கிள் பேக்கரியில் பிரட் கமர்கட்டு  ...

இன்னொரு மாஞ்சோலை ஆக மாறுகிறதா வால்பாறை..!!!

  இன்னொரு மாஞ்சோலை ஆக மாறுகிறதா வால்பாறை..!!! வால்பாறை மக்கள் உரிமை மீட்பு குழு கவனஈர்ப்பு கடையடைப்பு ஆர்ப்பாட்டம் என வால்பாறையில் நாளை நடத்தப்படும் ஆர்ப்பாட்டம் என்ன...? 🔴மத்திய அரசு வெளியிட்டுள்ள 29.11.2024 சுற்றுச்சூழல் உணர்திறன் மசோதா S.O.5129 (E) சுற்றுச்சூழல், துறை டெல்லி, இந்த மசோதாவால் வால்பாறை உள்ளிட்ட 183 கிராமங்களின் சமூக, பொருளாதார வாழ்வை பெரிய அளவில் பாதித்து வால்பாறை பகுதியின் எதிர் காலத்தை முற்றிலுமாக முடக்கி விடும் அபாயம் ஏற்படும் என்பதால் மத்திய, மாநில அரசின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் நம் வால்பாறை பகுதியில் 07.01.2025 அன்று 24 மணிநேர முழு கடையடைப்பும், ஆர்ப்பாட்டமும் நடைபெற இருக்கிறது. பொதுமக்கள், வியாபாரிகள், தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள், என அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு தந்து வால்பாறை பகுதியை அழிவில் இருந்து காக்கவும் உரிமைகளை மீட்டெடுக்கவும் அன்புடன் அழைக்கிறோம். (வால்பாறை பகுதியின் பாதிப்புகள் அபாயங்கள்:) 1. ஆழியார் செக் போஸ்ட் மாலை 6 மணிக்கு மேல் மூடப்படும், 2. தனியார், சுற்றுலா, கனரக வாகனங்கள், போக்குவரத்து மற்றும் அதனை சார்ந்த ஓட்டுநர்கள், ஊழியர்கள், ஓர்க்சாப்...

அரும்பு பருவம்

 அரும்பு பருவம் நனை, முகை, மொக்குள் என மூன்று பிரிவாக பெயர் குறிப்பிடப்படுகிறது. அதாவது அரும்பும் நிலைக்கு அரும்பு எனப் பெயர். நனை - அரும்பு வெளியில் தலை காட்டும் நிலை, முகை - தலைகாட்டிய அந்த அரும்பு முத்தாக மாறும் நிலை. மொக்குள் - பூவுக்குள் மணம் பெறக்கூடிய நிலை. இப்படி பல பிரிவுகளாக அரும்பு, நனை, முகை, மொக்குள், முகிழ், மொட்டு, போது, மலர், பூ, வீ, பொதும்பர், பொம்மல், செம்மல் என 13 பெயர்களில் தனித்தனியாகவும் சங்க இலக்கியப் பாடல்களில் பூக்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதில், செடியில் பூக்கள் பூத்துக் குலுங்கி நிற்கும் நிலை 'பொதும்பர்' என குறிப்பிடப்படுகிறது. செடியில் இருந்து கீழே தரையில் உதிர்ந்து கிடக்கும் பூக்கள் 'பொம்மல்' எனக் குறிப்பிடப்படுகிறது. இடம், பொருள், சூழலுக்கேற்ப ஒரு பொருளைக் குறிப்பிட தமிழ் மொழியில் தான் எவ்வளவு அழகிய பெயர்கள்? தமிழ் வளர்ப்போம்...!