Skip to main content

Posts

தேயிலைத்தோட்ட பகுதிகளில் பழைய கால்பந்து விதிமுறைகள்

 தேயிலைத்தோட்ட பகுதிகளில்  பழைய கால்பந்து விதிமுறைகள்    1. நடுவர் இல்லை. 2. வீரர்கள் சோர்வாகும் வரை, அல்லது சூரிய அஸ்தமனம் ஆகி பந்து, கண்ணுக்கு புலப்படாத, வரைக்கும் விளையாட்டு தொடரும். 3. ஸ்கோர் 23-22. வரையோ , அதை தாண்டியோ போய்க்கொண்டிருக்கும்  4. ஒரு வீரர் கடவுள் மீதும் , அம்மாமீது சத்தியம் செய்தால் பெனால்டி வழங்கப்படும். 5. குண்டான நபர் கோல்கீப்பராக செயல்படுவார் 6. பந்தின் உரிமையாளர் கோபமடைந்து, அவர் பந்தை எடுத்துக்கொண்டால், ஆட்டம் முடிந்துவிடும்  7. அனைவரும் ஒப்புக்கொண்டால் ஃபவுல்ஸ் கணக்கிடப்படும்  8. யாரவது ஃபுட்பால் பூட் அணிந்து வந்தால் , அவர்களை விளையாட அனுமதிப்பதில்லை  9. அணிகள் சமமாக இல்லாவிட்டால் கூடுதல் வீரர் அனுமதிக்கப்படுவார்  10. பெனால்டி கிக் போது கோல்கீப்பரை மாற்றிக்கொள்ளலாம்    11. பந்து கிராஸ்பாரை தாண்டிச் சென்றால், அது கோலா இல்லையா என்பதைப் பற்றி விவாதிக்க ஆட்டம் அரை மணி நேரம் இடைநிறுத்தப்படும் 12. பந்தின் உரிமையாளர் வலுவான அணிக்காக விளையாடுவார் இந்த அழகான பொக்கிச நினைவுகளில் வாழ்ந்த அனைவருக்கும்  வணக்கம்..
Recent posts

மழை ஆரம்பிச்சாவே... இந்த இடம் சொர்க்கமா மாறிடும்...

 தேயிலை தோட்டங்கள்ல அழிஞ்சது போக... மிச்சம் இருக்கற குட்டிக் காடு, இந்த தலநார்... வால்பாறைல இருக்கு... மழை ஆரம்பிச்சாவே... இந்த இடம் சொர்க்கமா மாறிடும்... வனவிலங்களோட நடமாட்டமும் இருக்கு... பெருசா tourist placeனு தெரியாததால, மக்கள் விட்டு வெச்சிருக்காங்க... லேசா ஒரு தூரல் விழுந்தாவே... இங்க அட்டைகள் படையெடுக்கும்... அதெல்லாம் பார்த்தா, இந்த அழகை அணைக்க முடியுமா??? மழைப் பருவம் ஆரம்பிச்சிடுச்சு... சீக்கிரம் கிளம்பிடணும்🥰 நீங்களும் இப்படி ஒரு குட்டி சொர்க்கத்தை பார்த்து கரைய வர்றீங்கனா... தயவு செய்து பாலிதீன் குப்பைகளை போடாம, பாட்டில்களை வீசாம, புகைப் பிடிக்காம, முக்கியமா, இங்க இருக்கற செடி கொடி மரங்களையோ... விலங்குகள், பறவைகளையோ தொந்தரவு பண்ணாம... அமைதியா வந்துட்டு போங்க... இயற்கையை ரசிங்க... அதோட இயல்பை மாத்தாம🥰❤️

வால்பாறை எங்களுக்கு சொர்க்கம்

 வெள்ளை சட்டை காக்கி அரைக்கால் ட்ரவுசர் எண்ணெய் தேய்த்து தலை வாரி, நெற்றியில் விபூதி  பிஞ்சு விரல்களில் மருதாணியிட்டு, மஞ்சள் பையில் ஒற்றை சிலேட்டுடன், காலணி அணிய வைத்து கல்லும் கல்லும்  கலந்த பாதையில் ஓடியாடி விளையாடி கால் நோகாதிருக்க கண்கள் ஆங்காங்கே இருந்த  தேயிலை செடி ஊர் தெரியும் வேலிச் செடிகள்  கொழுந்து ஏற்றி செல்லும் டிராக்டர் புல்லட்டில் செல்லும் மேலாளர்கள் அதிகாரி ஐயா மாமன், அப்பா மேஸ்திரிகள் அண்ணன் சூப்பர் வைசர்கள், குண்டு விளையாட்டு வேண்டாம் மிரட்டும் மாமா க்கள்   கடையில் இருக்கும் எம்ஜிஆர் சிவாஜி மற்றும் பல நடிகர்களின் காலண்டர்கள் சாமி போட்டோக்கள் சினிமா கொட்டாய்களில் போடப்படும் சினிமா போஸ்டர்கள் மரங்கள் உழைக்கும் உணர்வாலர்கள் கண்டுரசித்தபடியே பள்ளிக்குச் செல்லும் நாட்கள்  அப்பாவிற்கு தெரியாமல் அம்மா கொடுக்கும் எட்டனா. அம்மாவுக்கு தெரியாமல் அப்பா கொடுப்பார் எட்டனா. ஆக மொத்தம் ஒரு ரூபாய். இடையில் அண்ணன், அக்காவிடமும்  அடேங்கப்பா ஏகப்பட்ட சந்தோசம். பள்ளிக்கு அருகில் பஜார்  டீ கடை. ஐஸ் சைக்கிள் பேக்கரியில் பிரட் கமர்கட்டு  ...

இன்னொரு மாஞ்சோலை ஆக மாறுகிறதா வால்பாறை..!!!

  இன்னொரு மாஞ்சோலை ஆக மாறுகிறதா வால்பாறை..!!! வால்பாறை மக்கள் உரிமை மீட்பு குழு கவனஈர்ப்பு கடையடைப்பு ஆர்ப்பாட்டம் என வால்பாறையில் நாளை நடத்தப்படும் ஆர்ப்பாட்டம் என்ன...? 🔴மத்திய அரசு வெளியிட்டுள்ள 29.11.2024 சுற்றுச்சூழல் உணர்திறன் மசோதா S.O.5129 (E) சுற்றுச்சூழல், துறை டெல்லி, இந்த மசோதாவால் வால்பாறை உள்ளிட்ட 183 கிராமங்களின் சமூக, பொருளாதார வாழ்வை பெரிய அளவில் பாதித்து வால்பாறை பகுதியின் எதிர் காலத்தை முற்றிலுமாக முடக்கி விடும் அபாயம் ஏற்படும் என்பதால் மத்திய, மாநில அரசின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் நம் வால்பாறை பகுதியில் 07.01.2025 அன்று 24 மணிநேர முழு கடையடைப்பும், ஆர்ப்பாட்டமும் நடைபெற இருக்கிறது. பொதுமக்கள், வியாபாரிகள், தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள், என அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு தந்து வால்பாறை பகுதியை அழிவில் இருந்து காக்கவும் உரிமைகளை மீட்டெடுக்கவும் அன்புடன் அழைக்கிறோம். (வால்பாறை பகுதியின் பாதிப்புகள் அபாயங்கள்:) 1. ஆழியார் செக் போஸ்ட் மாலை 6 மணிக்கு மேல் மூடப்படும், 2. தனியார், சுற்றுலா, கனரக வாகனங்கள், போக்குவரத்து மற்றும் அதனை சார்ந்த ஓட்டுநர்கள், ஊழியர்கள், ஓர்க்சாப்...

அரும்பு பருவம்

 அரும்பு பருவம் நனை, முகை, மொக்குள் என மூன்று பிரிவாக பெயர் குறிப்பிடப்படுகிறது. அதாவது அரும்பும் நிலைக்கு அரும்பு எனப் பெயர். நனை - அரும்பு வெளியில் தலை காட்டும் நிலை, முகை - தலைகாட்டிய அந்த அரும்பு முத்தாக மாறும் நிலை. மொக்குள் - பூவுக்குள் மணம் பெறக்கூடிய நிலை. இப்படி பல பிரிவுகளாக அரும்பு, நனை, முகை, மொக்குள், முகிழ், மொட்டு, போது, மலர், பூ, வீ, பொதும்பர், பொம்மல், செம்மல் என 13 பெயர்களில் தனித்தனியாகவும் சங்க இலக்கியப் பாடல்களில் பூக்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதில், செடியில் பூக்கள் பூத்துக் குலுங்கி நிற்கும் நிலை 'பொதும்பர்' என குறிப்பிடப்படுகிறது. செடியில் இருந்து கீழே தரையில் உதிர்ந்து கிடக்கும் பூக்கள் 'பொம்மல்' எனக் குறிப்பிடப்படுகிறது. இடம், பொருள், சூழலுக்கேற்ப ஒரு பொருளைக் குறிப்பிட தமிழ் மொழியில் தான் எவ்வளவு அழகிய பெயர்கள்? தமிழ் வளர்ப்போம்...!

நட்பு

 நட்பு உடைந்து முகநூலானது ... சுற்றம் உடைந்து வாட்சப் ஆனது ... வாழ்த்துக்கள் உடைந்து ஸ்டேட்டஸ் ஆனது ... உணர்வுகள் உடைந்து ஸ்மைலியாய் ஆனது ... குளக்கரை உடைந்து குளியலறை ஆனது ... நெற்களம் உடைந்து கட்டடமானது ... காலநிலை உடைந்து வெப்ப மயமானது ... வளநிலம் உடைந்து தரிசாய் ஆனது ... துணிப்பை உடைந்து நெகிழியானது ... அங்காடி உடைந்து அமேசான் ஆனது ... விளைநிலம் உடைந்து மனைநிலம் ஆனது ... ஒத்தையடி உடைந்து எட்டு வழியானது ... கடிதம் உடைந்து இமெயிலானது ... விளையாட்டு உடைந்து வீடியோ கேம் ஆனது ... புத்தகம் உடைந்து  இ-புக் ஆனது ... சோறு உடைந்து 'ஓட்ஸ்'சாய்ப் போனது... இட்லி உடைந்து  பர்கர் ஆனது ... தோசை உடைந்து பிட்சாவானது ... குடிநீர் உடைந்து குப்பியில் ஆனது ... பசும்பால் உடைந்து பாக்கெட் ஆனது ... வெற்றிலை உடைந்து பீடாவானது ... தொலைபேசி உடைந்து கைபேசியானது ... வங்கி உடைந்து  பே டி எம் ஆனது ... நூலகம் உடைந்து கூகுளாய்ப் போனது ... புகைப்படம் உடைந்து செல்ஃபியாய் ஆனது ... மனிதம் உடைந்து மதவெறியானது ... அரசியல் உடைந்து அருவெறுப்பானது ... பொதுநலம் உடைந்து சுயநலமானது ... பொறுமை உடைந்து அவசரமான...

வால்பாறை இதில் அழகு

 மேற்குத் தொடர்ச்சி மலை உருவாக்கத்தையும் அதன் சிறப்புகளையும் அறிந்து கொள்வோம்... குஜராத் மாநிலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகள் உருவாகிறது அங்கிருந்து மகாராஷ்டிரா கோவா கர்நாடகா வழியாக தமிழ்நாடு கேரளா எல்லையில் முடிவடைகிறது... மேற்கு தொடர்ச்சி மலைகளின் மொத்த நீளம் சுமார் 1600 கிலோமீட்டர் தூரம் ஆகும்‌ உலகத்தில் உள்ள எந்த மலைகளுக்கும் இல்லாத சிறப்பு மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு மட்டுமே உண்டு.. மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும்தான் சோலை காடுகள் மூலம் சுனைகள் உருவாகி அதன் மூலம் நீர் கசிந்து அந்த நீர் ஓடைகளாக உருவாகி அது அருவியாகவும் ஆறாகவும் பாய்ந்தோடுகிறது.. மேற்கு தொடர்ச்சி மலைகள் பலவகையான கனிம வளங்களை கொண்டுள்ளது பல்லுயிர்கள் வாழும் இடமாக விளங்குகிறது... மேற்கு தொடர்ச்சி மலைகளை யுனெஸ்கோ அமைப்பு இந்தியாவின் பொக்கிஷமாக அறிவித்துள்ளது... நாமும் அந்த பொக்கிஷத்தை பாதுகாப்போம்.