Skip to main content

அழகிய கொடைக்கானலை கண்டுபிடித்தவர்கள் ஆங்கிலேயர்கள்

 அழகிய கொடைக்கானலை கண்டுபிடித்தவர்கள் ஆங்கிலேயர்கள்..

1800 களில் கோடை வெப்பத்தை தாங்க முடியாத ஆங்கிலேயர்கள் குளிரான பகுதியை கண்டுபிடிப்பதற்காக பி.ச. வார்ட் என்ற ஆங்கிலேயரை தமிழ்நாட்டின் தென்பகுதிக்கு அனுப்பி வைத்தனர் அவர் பழனி மலைத் தொடரின் பெயரிடப்படாத ஒரு பகுதியை கண்டறிந்தார்...

இதற்கு முன்பே இங்கு பல நூறு ஆண்டுகளாக பளியர் இன மக்கள் வாழ்ந்து வந்தனர் அவர்கள் மலைப்பகுதிகளில் விளையும் கிழங்கு மற்றும் காய்கறிகளை கீழே உள்ள பெரியகுளம் பகுதிக்கு வந்து விற்று விட்டு செல்வார்கள்...

அது ஒரு ஒத்தையடி பாதை அந்தப் பாதையின் வழியாக 1821 ஆம் ஆண்டு தனது ஆய்வை தொடங்கினார் வார்ட் பெரிய குளத்தில் இருந்து கும்பக்கரை வழியாக ஏழு கிலோ மீட்டர் தொலைவுக்கு மேலே சென்றவுடன் வெல்லக்கவி என்ற கிராமம் வந்தது அதுதான் ஆங்கிலேயர்கள் கால் பதித்த இன்றைய கொடைக்கானலின் முதல் பகுதி.


அங்கிருந்து டால்பின் நோஸ் என்கிற ஒரு பகுதி உள்ளது அந்த வழியாக அவர் சென்ற இடம்தான் இன்றைய கொடைக்கானல் அந்தக் குளிர் அவருக்கு மிகவும் பிடித்துப் போக அங்கேயே தங்கி விட்டார் அவர் தங்கியது மட்டுமல்லாமல் இந்த சூழல் மிகவும் அழகாக இருக்கிறது என்று பிற ஆங்கிலேயர்களையும் அந்த பகுதிக்கு அழைத்தார்... 

அவர் 1825 ஆம் ஆண்டுகளில் கட்டிய முதல் கட்டிடம் இன்றும் கொடைக்கானலில் உள்ளது இந்த செய்தி பல ஆங்கிலேயர்களுக்கு தெரியவே அவர்களும் அங்கு வந்து தங்கத் தொடங்கினர் கொடைக்கானல் மலையின் பூர்வ குடிகளை தவிர்த்து சமவெளி பகுதியில் இருந்து மக்கள் முதல் முதலாக குடியேறிய ஆண்டு 1845 மே 26 இந்த ஆண்டுடன் கொடைக்கானல் உருவாகி 179 ஆண்டுகள் ஆகிறது... 


அப்போதைய மதுரை ஆட்சியர் லேவிங்ஸ் தன் நண்பர் ஜான் டேவ் உடன் இணைந்து உருவாக்கிய ஏரியே இன்றைய கொடைக்கானலின் நட்சத்திர ஏரி... 

1860 ஆம் ஆண்டு தான் முதன் முதலில் கொடைக்கானல் என்ற பெயர் அரசிதழில் இடம்பெற்றது... 


கொடைக்கானலை மூன்று வகையாகப் பிரிப்பார்கள் கீழ்மலை நடுமலை மேல்மலை கீழ்மலை என்பது இன்றைய பெருமாள் மலை என்பது தரையில் இருந்து சுமார் 3000 அடி உயரம் கொண்டது நடுமலை என்பது இன்றைய கொடைக்கானல் கொடைக்கானல் சுமார் 4500 முதல் 5000 அடி உயரம் கொண்டது மேல்மலை என்பது பூம்பாறை மன்னவனூரை அடுத்த கிளாவரை என்கிற பகுதி கிளாவரையை தாண்டியவுடன் மூனார் பகுதி வந்துவிடும் கிளாவரை தரையில் இருந்து சுமார் 6500 அடி உயரம் கொண்டது இது மிகவும் குளிர்ச்சியான பகுதி...



கொடைக்கானல் சுற்றுலா வருபவர்கள் பெரும்பாலானோர் யாரும் மேல் மலைக்கு செல்வதில்லை

Comments

Popular posts from this blog

இன்னொரு மாஞ்சோலை ஆக மாறுகிறதா வால்பாறை..!!!

  இன்னொரு மாஞ்சோலை ஆக மாறுகிறதா வால்பாறை..!!! வால்பாறை மக்கள் உரிமை மீட்பு குழு கவனஈர்ப்பு கடையடைப்பு ஆர்ப்பாட்டம் என வால்பாறையில் நாளை நடத்தப்படும் ஆர்ப்பாட்டம் என்ன...? 🔴மத்திய அரசு வெளியிட்டுள்ள 29.11.2024 சுற்றுச்சூழல் உணர்திறன் மசோதா S.O.5129 (E) சுற்றுச்சூழல், துறை டெல்லி, இந்த மசோதாவால் வால்பாறை உள்ளிட்ட 183 கிராமங்களின் சமூக, பொருளாதார வாழ்வை பெரிய அளவில் பாதித்து வால்பாறை பகுதியின் எதிர் காலத்தை முற்றிலுமாக முடக்கி விடும் அபாயம் ஏற்படும் என்பதால் மத்திய, மாநில அரசின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் நம் வால்பாறை பகுதியில் 07.01.2025 அன்று 24 மணிநேர முழு கடையடைப்பும், ஆர்ப்பாட்டமும் நடைபெற இருக்கிறது. பொதுமக்கள், வியாபாரிகள், தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள், என அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு தந்து வால்பாறை பகுதியை அழிவில் இருந்து காக்கவும் உரிமைகளை மீட்டெடுக்கவும் அன்புடன் அழைக்கிறோம். (வால்பாறை பகுதியின் பாதிப்புகள் அபாயங்கள்:) 1. ஆழியார் செக் போஸ்ட் மாலை 6 மணிக்கு மேல் மூடப்படும், 2. தனியார், சுற்றுலா, கனரக வாகனங்கள், போக்குவரத்து மற்றும் அதனை சார்ந்த ஓட்டுநர்கள், ஊழியர்கள், ஓர்க்சாப்...

மழை ஆரம்பிச்சாவே... இந்த இடம் சொர்க்கமா மாறிடும்...

 தேயிலை தோட்டங்கள்ல அழிஞ்சது போக... மிச்சம் இருக்கற குட்டிக் காடு, இந்த தலநார்... வால்பாறைல இருக்கு... மழை ஆரம்பிச்சாவே... இந்த இடம் சொர்க்கமா மாறிடும்... வனவிலங்களோட நடமாட்டமும் இருக்கு... பெருசா tourist placeனு தெரியாததால, மக்கள் விட்டு வெச்சிருக்காங்க... லேசா ஒரு தூரல் விழுந்தாவே... இங்க அட்டைகள் படையெடுக்கும்... அதெல்லாம் பார்த்தா, இந்த அழகை அணைக்க முடியுமா??? மழைப் பருவம் ஆரம்பிச்சிடுச்சு... சீக்கிரம் கிளம்பிடணும்🥰 நீங்களும் இப்படி ஒரு குட்டி சொர்க்கத்தை பார்த்து கரைய வர்றீங்கனா... தயவு செய்து பாலிதீன் குப்பைகளை போடாம, பாட்டில்களை வீசாம, புகைப் பிடிக்காம, முக்கியமா, இங்க இருக்கற செடி கொடி மரங்களையோ... விலங்குகள், பறவைகளையோ தொந்தரவு பண்ணாம... அமைதியா வந்துட்டு போங்க... இயற்கையை ரசிங்க... அதோட இயல்பை மாத்தாம🥰❤️

நட்பு

 நட்பு உடைந்து முகநூலானது ... சுற்றம் உடைந்து வாட்சப் ஆனது ... வாழ்த்துக்கள் உடைந்து ஸ்டேட்டஸ் ஆனது ... உணர்வுகள் உடைந்து ஸ்மைலியாய் ஆனது ... குளக்கரை உடைந்து குளியலறை ஆனது ... நெற்களம் உடைந்து கட்டடமானது ... காலநிலை உடைந்து வெப்ப மயமானது ... வளநிலம் உடைந்து தரிசாய் ஆனது ... துணிப்பை உடைந்து நெகிழியானது ... அங்காடி உடைந்து அமேசான் ஆனது ... விளைநிலம் உடைந்து மனைநிலம் ஆனது ... ஒத்தையடி உடைந்து எட்டு வழியானது ... கடிதம் உடைந்து இமெயிலானது ... விளையாட்டு உடைந்து வீடியோ கேம் ஆனது ... புத்தகம் உடைந்து  இ-புக் ஆனது ... சோறு உடைந்து 'ஓட்ஸ்'சாய்ப் போனது... இட்லி உடைந்து  பர்கர் ஆனது ... தோசை உடைந்து பிட்சாவானது ... குடிநீர் உடைந்து குப்பியில் ஆனது ... பசும்பால் உடைந்து பாக்கெட் ஆனது ... வெற்றிலை உடைந்து பீடாவானது ... தொலைபேசி உடைந்து கைபேசியானது ... வங்கி உடைந்து  பே டி எம் ஆனது ... நூலகம் உடைந்து கூகுளாய்ப் போனது ... புகைப்படம் உடைந்து செல்ஃபியாய் ஆனது ... மனிதம் உடைந்து மதவெறியானது ... அரசியல் உடைந்து அருவெறுப்பானது ... பொதுநலம் உடைந்து சுயநலமானது ... பொறுமை உடைந்து அவசரமான...