Skip to main content

வால்பாறை ஊரும், பேரும்...!!!

Welcome to Valparai…


வால்பாறை ஊரும், பேரும்...!!!
பெயர் காரணம் என்னவா இருக்கும், வால் இல்லாத ஊருக்கு ஏன் இந்த பேரு..!!!

சின்னதா தகவல் 

சிலு சிலு என்று வீசும் காற்று,
காட்சி எங்கும் பசுமை,

தென் அமெரிக்காவின் கிராஃபிட்டி தலைநகரங்களில் ஒன்றாக Valparaiso சிலி கருதப்படுகிறது

சிலியின் முக்கிய நகரமான வால்பாரைசோவ் (Valparaíso
City in Chile) இதன் முக்கியகாரணமாம்,

மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் வால்பாறையின் 
முந்தைய பெயர் பூனாச்சி மலை, 

சிலி நாட்டின் முக்கிய கடற்கரை நகரமான வால்பெய்ரசோவ் இது போன்று இந்த ஊர் இருந்ததால் ஆங்கிலேயர்கள் இந்தப் பெயர் வைத்துள்ளார்கள் என்பது தகவல் 

வல்பெய்ரசோவ் என்ற பெயர் மருவி 
வால் பாறை ஆனதாக கூறப்படுவது , இன்னும் நாம் எங்கெல்லாம் வால்பாறை என்று tag செய்தாலும் அப்பெயர் வந்து தான் செல்கிறது,

ஆங்கிலேயன் காலத்தில் #கார்வர்_மார்ஷ்” என்ற அறிஞன் ஆனைமலை காடுகளுக்குள் ஓர் ஊர் இருப்பதை கண்டு தேடி வந்தார். அந்த ஊர் யாருமற்ற புல்வெளியாக, மரங்களின் அற்புத வனமாக மலை சரிவின் ஆத்மார்த்தமாக இருந்தது. மலையை வெட்டி வெட்டி சாலை போட்டார். வளைந்து வளைந்து மேலே சென்றார். காடு நகர்ந்தது. கண்கள் நிறைந்தது. காபியும் தேயிலையும், பனித்துளிகள் சில்லிட, புலிகளும் யானைகளும், பளிங்கு பாறைகள் துள்ளிட, நதிகளும், ஓடைகளும், வான் நிறத்தில் வெள்ளியிட, ஆக!!!, அற்புத வானம் அவர்கள் மேல் விரிந்தது. அற்புத வனம் பக்கவாட்டில் பிரிந்தது. இந்த மலைப்பாதை உருவாக்கும் கால கட்டத்தில் ஏகப்பட்ட உயிர் பலிகள் நிகழ்ந்துள்ளது என்கிறது வாய்வழி வரலாறுகளும்,

பசிக்கும் பஞ்சத்துக்கும் மாட்டிக் கொண்ட மக்கள் பழனியிலிருந்து, திருநெல்வேலியிருந்து, கோவையிலிருந்து, ஈரோட்டிலிருந்து, மைசூரிலிருந்து, தர்மபுரியிலிருந்து, இலங்கையிலிருந்து, என்று அங்கே குடி புகுந்தார்கள். கருங்கற்களால் ஆன லைன் வீடுகள் கட்டப்பட்டன. அது சிலியின் வீடுகளை ஒத்திருந்தது. சிலியை போல இருக்கும் இந்த இடத்துக்கு சிலியின் முக்கியமான ஊரான வால்பாறைஸோ என்ற பெயரையே இங்கும் வைத்தார்கள். காலப்போக்கில் வால்பாறைஸோ வால்பாறையாக மாறி இருக்கிறது.

விறகு, சுத்தமான மழை நீர் மலை பொதிந்து கொண்டு அவ்வப்போது சொட்டும் சிறு ஓடைகள், கால்வாய்கள், வீடு என்று எல்லாம் இலவசமாக கிடைக்க அவர்கள் வேலை செய்யத் துவங்கினார்கள். காடு தேயிலையாகவும்.. காபியாகவும்… மாறியது. தேயிலை வளர்வதற்கான சரிவான பரப்புகள் அதிகம் உள்ள இடங்கள் வால்பாறை முழுக்க நிறைந்து இருக்கிறது. வருடம் முழுவதும் கொட்டும் மழையால் வால்பாறை சின்ன சிறப்புஞ்சி என்று பெயர் பெற்றது,

 வால்பாறை வளமானது. வாழத் தகுதியானது. ஊர் நிறைந்தது. அடுத்தடுத்து ஊர் பிறந்தது. மலையும் மலை சார்ந்த வாழ்வும் வசீகரித்தது. எல்லா வீடுகளும் கூட்டு குடும்பம் போலாயின, எவர் வீட்டு கதவும் எப்போதும் திறக்கும் கடவுளின் ஆசீர்வாதங்களால் தட்டவும் திறக்கவும் காத்திருந்தன. ஆனால் அங்கே தயாரிக்கப்படும் உயர் தர தேயிலையையும் காபியையும் அந்த மக்கள் இன்று வரை பருகியதே இல்லை,

கவர்க்கல் எப்போதும் பனி படரும் பகுதி., இதோ இந்த பக்கம் ஓர் ஊர் இருக்கிறது” என்று வழி காட்டிய கார்வர் மார்ஷ் அவர்களுக்கு சிலை இன்றும் இருக்கிறது.

அதிக காதல் திருமணங்கள் நடக்கும் ஊர். சாதி மதங்கள் அத்தனை பாடு படுத்துவதில்லை. எவர் வீட்டுக்குள்ளும் அக்கா, அண்ணா, தம்பி, மாமா, மச்சான், நண்பா என்று முறை வைத்து கொண்டு நுழையும் அன்பை காண முடிகிறது. “அக்கா கொஞ்சம் கொழம்பு குடேன்” என்றபடியே தட்டில் சோற்றை போட்டுக் கொண்டு பக்கத்து வீட்டு வாசலில் அமர்ந்து மதிய உணவை முடித்துக் கொள்ளும் அழகியல் அங்கே ஏராளம்.

பிடித்துப்போங்கள்,  யாருக்கு தெரியும்…. வால்பாறை காட்டுக்குள் அதோ பறக்கும் பட்டாம்பூச்சி நீங்களாகவும் இருக்கலாம்.

இன்னும் நிறைய ஆச்சர்யமான தகவல்கள் இந்த வால்பாறை பற்றி உள்ளது, இன்னொரு பதிவில் நிச்சயம் பதிவு செய்கிறேன்...

ஆச்சர்யங்களை நோக்கிய பயணம் தொடரும்...

நன்றி!


Comments

Popular posts from this blog

இன்னொரு மாஞ்சோலை ஆக மாறுகிறதா வால்பாறை..!!!

  இன்னொரு மாஞ்சோலை ஆக மாறுகிறதா வால்பாறை..!!! வால்பாறை மக்கள் உரிமை மீட்பு குழு கவனஈர்ப்பு கடையடைப்பு ஆர்ப்பாட்டம் என வால்பாறையில் நாளை நடத்தப்படும் ஆர்ப்பாட்டம் என்ன...? 🔴மத்திய அரசு வெளியிட்டுள்ள 29.11.2024 சுற்றுச்சூழல் உணர்திறன் மசோதா S.O.5129 (E) சுற்றுச்சூழல், துறை டெல்லி, இந்த மசோதாவால் வால்பாறை உள்ளிட்ட 183 கிராமங்களின் சமூக, பொருளாதார வாழ்வை பெரிய அளவில் பாதித்து வால்பாறை பகுதியின் எதிர் காலத்தை முற்றிலுமாக முடக்கி விடும் அபாயம் ஏற்படும் என்பதால் மத்திய, மாநில அரசின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் நம் வால்பாறை பகுதியில் 07.01.2025 அன்று 24 மணிநேர முழு கடையடைப்பும், ஆர்ப்பாட்டமும் நடைபெற இருக்கிறது. பொதுமக்கள், வியாபாரிகள், தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள், என அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு தந்து வால்பாறை பகுதியை அழிவில் இருந்து காக்கவும் உரிமைகளை மீட்டெடுக்கவும் அன்புடன் அழைக்கிறோம். (வால்பாறை பகுதியின் பாதிப்புகள் அபாயங்கள்:) 1. ஆழியார் செக் போஸ்ட் மாலை 6 மணிக்கு மேல் மூடப்படும், 2. தனியார், சுற்றுலா, கனரக வாகனங்கள், போக்குவரத்து மற்றும் அதனை சார்ந்த ஓட்டுநர்கள், ஊழியர்கள், ஓர்க்சாப்...

மழை ஆரம்பிச்சாவே... இந்த இடம் சொர்க்கமா மாறிடும்...

 தேயிலை தோட்டங்கள்ல அழிஞ்சது போக... மிச்சம் இருக்கற குட்டிக் காடு, இந்த தலநார்... வால்பாறைல இருக்கு... மழை ஆரம்பிச்சாவே... இந்த இடம் சொர்க்கமா மாறிடும்... வனவிலங்களோட நடமாட்டமும் இருக்கு... பெருசா tourist placeனு தெரியாததால, மக்கள் விட்டு வெச்சிருக்காங்க... லேசா ஒரு தூரல் விழுந்தாவே... இங்க அட்டைகள் படையெடுக்கும்... அதெல்லாம் பார்த்தா, இந்த அழகை அணைக்க முடியுமா??? மழைப் பருவம் ஆரம்பிச்சிடுச்சு... சீக்கிரம் கிளம்பிடணும்🥰 நீங்களும் இப்படி ஒரு குட்டி சொர்க்கத்தை பார்த்து கரைய வர்றீங்கனா... தயவு செய்து பாலிதீன் குப்பைகளை போடாம, பாட்டில்களை வீசாம, புகைப் பிடிக்காம, முக்கியமா, இங்க இருக்கற செடி கொடி மரங்களையோ... விலங்குகள், பறவைகளையோ தொந்தரவு பண்ணாம... அமைதியா வந்துட்டு போங்க... இயற்கையை ரசிங்க... அதோட இயல்பை மாத்தாம🥰❤️

நட்பு

 நட்பு உடைந்து முகநூலானது ... சுற்றம் உடைந்து வாட்சப் ஆனது ... வாழ்த்துக்கள் உடைந்து ஸ்டேட்டஸ் ஆனது ... உணர்வுகள் உடைந்து ஸ்மைலியாய் ஆனது ... குளக்கரை உடைந்து குளியலறை ஆனது ... நெற்களம் உடைந்து கட்டடமானது ... காலநிலை உடைந்து வெப்ப மயமானது ... வளநிலம் உடைந்து தரிசாய் ஆனது ... துணிப்பை உடைந்து நெகிழியானது ... அங்காடி உடைந்து அமேசான் ஆனது ... விளைநிலம் உடைந்து மனைநிலம் ஆனது ... ஒத்தையடி உடைந்து எட்டு வழியானது ... கடிதம் உடைந்து இமெயிலானது ... விளையாட்டு உடைந்து வீடியோ கேம் ஆனது ... புத்தகம் உடைந்து  இ-புக் ஆனது ... சோறு உடைந்து 'ஓட்ஸ்'சாய்ப் போனது... இட்லி உடைந்து  பர்கர் ஆனது ... தோசை உடைந்து பிட்சாவானது ... குடிநீர் உடைந்து குப்பியில் ஆனது ... பசும்பால் உடைந்து பாக்கெட் ஆனது ... வெற்றிலை உடைந்து பீடாவானது ... தொலைபேசி உடைந்து கைபேசியானது ... வங்கி உடைந்து  பே டி எம் ஆனது ... நூலகம் உடைந்து கூகுளாய்ப் போனது ... புகைப்படம் உடைந்து செல்ஃபியாய் ஆனது ... மனிதம் உடைந்து மதவெறியானது ... அரசியல் உடைந்து அருவெறுப்பானது ... பொதுநலம் உடைந்து சுயநலமானது ... பொறுமை உடைந்து அவசரமான...