Skip to main content

Valparai The Seventh Heaven

 வால்பாறை.

இது நாங்கள் வாழ்ந்த ஊரல்ல,

எங்களை,

வாழ வைத்த ஊர்,

இது 

நாங்கள் பிறந்த ஊர் மட்டுமல்ல,

உறவுகளால் பின்னிப் பிணைந்த ஊர்.


இங்கே 

நாங்கள் வாழ்ந்ததோடுமட்டுமல்ல,

எப்படி

 வாழ வேண்டும் என்பதையும் கற்றுக் கொடு த்த ஊர்.


இந்த 

ஊர் சாதி, மதம்,கருப்பு, சிவப்பு, ஏழை, பணக்காரன் 

என்று எந்த வேறு பாட்டையும் கற்றுக்கொடுக்கவில்லை.


இங்கே 

ராமசாமியும் பீட்டரும் சாகுல் அமீதும் சகோதரர்களாய் 

வாழ முடியும் என்று சாதித்துக் காட்டிய ஊர்.

இந்த 

ஊர் கொய்யா,

பலாப் 

பழங்களை 

மட்டுமல்ல 

கம்மல்,

பழம் 

கொட்டம் பழம்,

நாக்குறிஞ்சாம் 

பழம்,

தட்

பூட் 

பழம்,

மொட்லீ 

பழம் 

போன்ற 

சுவை 

மிகுந்த 

பழங்களையும்.

சுக்குட்டிகீரை 

பொண்ணாங்கண்ணி கீரை,

சிறுகிரை,

ஐ விரல் கீரை 

சே மங்கீரை,

போன்ற 

சத்து

நிறைந்த 

கீரை

களையும் 

வாரிக் 

கொடுத்தது.


இந்த 

ஊரில் 

இன்று 

மட்டுமல்ல,

வாழ்ந்த 

எங்களிடமும் 

ஈரம் 

இன்னும் 

வற் றாமல் 

தான் 

இருக்கிறது.


இந்த 

ஊரில்

தான் 

முதன் 

முதலாக 

ரேடியோ 

கேட்டோம்,

கல்யாணம் 

காது

குத்துக்கு, 

திருவிழாவுக்கு,

மைக் 

செட் 

கட்டினோ ம்.

குண்டு 

விளையாடினோம்,

நாடகம் 

பார்த்தோம் 

நல்ல 

பல 

கதைகள் 

கேட்டோம்,

சைக்கிள் 

ஒட்டினோம்,

வெள்ளைத் 

திரையில் 

சினிமா 

பார்த்தோம்.

கரகாட்டம் 

பார்த்தோம் 

பொம்மைக் 

கூத்து,

மரண 

கிணறு,

போன்றவற்றை 

பார்த்தோம்.

நீச்சல் 

பழகிணோம்,

மழை யில் 

நனைந்தோம்


இவை 

எல்லா

வற்றிலும் 

மகிழ்ச்சியை 

மட்டுமல்ல 

மன நிறைவையும் 

கண்டோம்.


இந்த 

ஊர் 

சொர்க்கமல்ல.

ஏனென்றால்

இறப்பிற்கு 

பின்னால் 

தானே 

சொர்க்கம். 

அதை 

யார்

 கண்டது?

வாழும் 

போதே 

சொர்க்கமாய் 

இருந்த 

இந்த 

ஊர்

சொர்க்கத்துக்கு 

மேலே 

தானே?





Comments

Popular posts from this blog

இன்னொரு மாஞ்சோலை ஆக மாறுகிறதா வால்பாறை..!!!

  இன்னொரு மாஞ்சோலை ஆக மாறுகிறதா வால்பாறை..!!! வால்பாறை மக்கள் உரிமை மீட்பு குழு கவனஈர்ப்பு கடையடைப்பு ஆர்ப்பாட்டம் என வால்பாறையில் நாளை நடத்தப்படும் ஆர்ப்பாட்டம் என்ன...? 🔴மத்திய அரசு வெளியிட்டுள்ள 29.11.2024 சுற்றுச்சூழல் உணர்திறன் மசோதா S.O.5129 (E) சுற்றுச்சூழல், துறை டெல்லி, இந்த மசோதாவால் வால்பாறை உள்ளிட்ட 183 கிராமங்களின் சமூக, பொருளாதார வாழ்வை பெரிய அளவில் பாதித்து வால்பாறை பகுதியின் எதிர் காலத்தை முற்றிலுமாக முடக்கி விடும் அபாயம் ஏற்படும் என்பதால் மத்திய, மாநில அரசின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் நம் வால்பாறை பகுதியில் 07.01.2025 அன்று 24 மணிநேர முழு கடையடைப்பும், ஆர்ப்பாட்டமும் நடைபெற இருக்கிறது. பொதுமக்கள், வியாபாரிகள், தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள், என அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு தந்து வால்பாறை பகுதியை அழிவில் இருந்து காக்கவும் உரிமைகளை மீட்டெடுக்கவும் அன்புடன் அழைக்கிறோம். (வால்பாறை பகுதியின் பாதிப்புகள் அபாயங்கள்:) 1. ஆழியார் செக் போஸ்ட் மாலை 6 மணிக்கு மேல் மூடப்படும், 2. தனியார், சுற்றுலா, கனரக வாகனங்கள், போக்குவரத்து மற்றும் அதனை சார்ந்த ஓட்டுநர்கள், ஊழியர்கள், ஓர்க்சாப்...

மழை ஆரம்பிச்சாவே... இந்த இடம் சொர்க்கமா மாறிடும்...

 தேயிலை தோட்டங்கள்ல அழிஞ்சது போக... மிச்சம் இருக்கற குட்டிக் காடு, இந்த தலநார்... வால்பாறைல இருக்கு... மழை ஆரம்பிச்சாவே... இந்த இடம் சொர்க்கமா மாறிடும்... வனவிலங்களோட நடமாட்டமும் இருக்கு... பெருசா tourist placeனு தெரியாததால, மக்கள் விட்டு வெச்சிருக்காங்க... லேசா ஒரு தூரல் விழுந்தாவே... இங்க அட்டைகள் படையெடுக்கும்... அதெல்லாம் பார்த்தா, இந்த அழகை அணைக்க முடியுமா??? மழைப் பருவம் ஆரம்பிச்சிடுச்சு... சீக்கிரம் கிளம்பிடணும்🥰 நீங்களும் இப்படி ஒரு குட்டி சொர்க்கத்தை பார்த்து கரைய வர்றீங்கனா... தயவு செய்து பாலிதீன் குப்பைகளை போடாம, பாட்டில்களை வீசாம, புகைப் பிடிக்காம, முக்கியமா, இங்க இருக்கற செடி கொடி மரங்களையோ... விலங்குகள், பறவைகளையோ தொந்தரவு பண்ணாம... அமைதியா வந்துட்டு போங்க... இயற்கையை ரசிங்க... அதோட இயல்பை மாத்தாம🥰❤️

நட்பு

 நட்பு உடைந்து முகநூலானது ... சுற்றம் உடைந்து வாட்சப் ஆனது ... வாழ்த்துக்கள் உடைந்து ஸ்டேட்டஸ் ஆனது ... உணர்வுகள் உடைந்து ஸ்மைலியாய் ஆனது ... குளக்கரை உடைந்து குளியலறை ஆனது ... நெற்களம் உடைந்து கட்டடமானது ... காலநிலை உடைந்து வெப்ப மயமானது ... வளநிலம் உடைந்து தரிசாய் ஆனது ... துணிப்பை உடைந்து நெகிழியானது ... அங்காடி உடைந்து அமேசான் ஆனது ... விளைநிலம் உடைந்து மனைநிலம் ஆனது ... ஒத்தையடி உடைந்து எட்டு வழியானது ... கடிதம் உடைந்து இமெயிலானது ... விளையாட்டு உடைந்து வீடியோ கேம் ஆனது ... புத்தகம் உடைந்து  இ-புக் ஆனது ... சோறு உடைந்து 'ஓட்ஸ்'சாய்ப் போனது... இட்லி உடைந்து  பர்கர் ஆனது ... தோசை உடைந்து பிட்சாவானது ... குடிநீர் உடைந்து குப்பியில் ஆனது ... பசும்பால் உடைந்து பாக்கெட் ஆனது ... வெற்றிலை உடைந்து பீடாவானது ... தொலைபேசி உடைந்து கைபேசியானது ... வங்கி உடைந்து  பே டி எம் ஆனது ... நூலகம் உடைந்து கூகுளாய்ப் போனது ... புகைப்படம் உடைந்து செல்ஃபியாய் ஆனது ... மனிதம் உடைந்து மதவெறியானது ... அரசியல் உடைந்து அருவெறுப்பானது ... பொதுநலம் உடைந்து சுயநலமானது ... பொறுமை உடைந்து அவசரமான...