வால்பாறை.
இது நாங்கள் வாழ்ந்த ஊரல்ல,
எங்களை,
வாழ வைத்த ஊர்,
இது
நாங்கள் பிறந்த ஊர் மட்டுமல்ல,
உறவுகளால் பின்னிப் பிணைந்த ஊர்.
இங்கே
நாங்கள் வாழ்ந்ததோடுமட்டுமல்ல,
எப்படி
வாழ வேண்டும் என்பதையும் கற்றுக் கொடு த்த ஊர்.
இந்த
ஊர் சாதி, மதம்,கருப்பு, சிவப்பு, ஏழை, பணக்காரன்
என்று எந்த வேறு பாட்டையும் கற்றுக்கொடுக்கவில்லை.
இங்கே
ராமசாமியும் பீட்டரும் சாகுல் அமீதும் சகோதரர்களாய்
வாழ முடியும் என்று சாதித்துக் காட்டிய ஊர்.
இந்த
ஊர் கொய்யா,
பலாப்
பழங்களை
மட்டுமல்ல
கம்மல்,
பழம்
கொட்டம் பழம்,
நாக்குறிஞ்சாம்
பழம்,
தட்
பூட்
பழம்,
மொட்லீ
பழம்
போன்ற
சுவை
மிகுந்த
பழங்களையும்.
சுக்குட்டிகீரை
பொண்ணாங்கண்ணி கீரை,
சிறுகிரை,
ஐ விரல் கீரை
சே மங்கீரை,
போன்ற
சத்து
நிறைந்த
கீரை
களையும்
வாரிக்
கொடுத்தது.
இந்த
ஊரில்
இன்று
மட்டுமல்ல,
வாழ்ந்த
எங்களிடமும்
ஈரம்
இன்னும்
வற் றாமல்
தான்
இருக்கிறது.
இந்த
ஊரில்
தான்
முதன்
முதலாக
ரேடியோ
கேட்டோம்,
கல்யாணம்
காது
குத்துக்கு,
திருவிழாவுக்கு,
மைக்
செட்
கட்டினோ ம்.
குண்டு
விளையாடினோம்,
நாடகம்
பார்த்தோம்
நல்ல
பல
கதைகள்
கேட்டோம்,
சைக்கிள்
ஒட்டினோம்,
வெள்ளைத்
திரையில்
சினிமா
பார்த்தோம்.
கரகாட்டம்
பார்த்தோம்
பொம்மைக்
கூத்து,
மரண
கிணறு,
போன்றவற்றை
பார்த்தோம்.
நீச்சல்
பழகிணோம்,
மழை யில்
நனைந்தோம்
இவை
எல்லா
வற்றிலும்
மகிழ்ச்சியை
மட்டுமல்ல
மன நிறைவையும்
கண்டோம்.
இந்த
ஊர்
சொர்க்கமல்ல.
ஏனென்றால்
இறப்பிற்கு
பின்னால்
தானே
சொர்க்கம்.
அதை
யார்
கண்டது?
வாழும்
போதே
சொர்க்கமாய்
இருந்த
இந்த
ஊர்
சொர்க்கத்துக்கு
மேலே
தானே?

Comments
Post a Comment