Skip to main content

Posts

மழை ஆரம்பிச்சாவே... இந்த இடம் சொர்க்கமா மாறிடும்...

 தேயிலை தோட்டங்கள்ல அழிஞ்சது போக... மிச்சம் இருக்கற குட்டிக் காடு, இந்த தலநார்... வால்பாறைல இருக்கு... மழை ஆரம்பிச்சாவே... இந்த இடம் சொர்க்கமா மாறிடும்... வனவிலங்களோட நடமாட்டமும் இருக்கு... பெருசா tourist placeனு தெரியாததால, மக்கள் விட்டு வெச்சிருக்காங்க... லேசா ஒரு தூரல் விழுந்தாவே... இங்க அட்டைகள் படையெடுக்கும்... அதெல்லாம் பார்த்தா, இந்த அழகை அணைக்க முடியுமா??? மழைப் பருவம் ஆரம்பிச்சிடுச்சு... சீக்கிரம் கிளம்பிடணும்🥰 நீங்களும் இப்படி ஒரு குட்டி சொர்க்கத்தை பார்த்து கரைய வர்றீங்கனா... தயவு செய்து பாலிதீன் குப்பைகளை போடாம, பாட்டில்களை வீசாம, புகைப் பிடிக்காம, முக்கியமா, இங்க இருக்கற செடி கொடி மரங்களையோ... விலங்குகள், பறவைகளையோ தொந்தரவு பண்ணாம... அமைதியா வந்துட்டு போங்க... இயற்கையை ரசிங்க... அதோட இயல்பை மாத்தாம🥰❤️

வால்பாறை எங்களுக்கு சொர்க்கம்

 வெள்ளை சட்டை காக்கி அரைக்கால் ட்ரவுசர் எண்ணெய் தேய்த்து தலை வாரி, நெற்றியில் விபூதி  பிஞ்சு விரல்களில் மருதாணியிட்டு, மஞ்சள் பையில் ஒற்றை சிலேட்டுடன், காலணி அணிய வைத்து கல்லும் கல்லும்  கலந்த பாதையில் ஓடியாடி விளையாடி கால் நோகாதிருக்க கண்கள் ஆங்காங்கே இருந்த  தேயிலை செடி ஊர் தெரியும் வேலிச் செடிகள்  கொழுந்து ஏற்றி செல்லும் டிராக்டர் புல்லட்டில் செல்லும் மேலாளர்கள் அதிகாரி ஐயா மாமன், அப்பா மேஸ்திரிகள் அண்ணன் சூப்பர் வைசர்கள், குண்டு விளையாட்டு வேண்டாம் மிரட்டும் மாமா க்கள்   கடையில் இருக்கும் எம்ஜிஆர் சிவாஜி மற்றும் பல நடிகர்களின் காலண்டர்கள் சாமி போட்டோக்கள் சினிமா கொட்டாய்களில் போடப்படும் சினிமா போஸ்டர்கள் மரங்கள் உழைக்கும் உணர்வாலர்கள் கண்டுரசித்தபடியே பள்ளிக்குச் செல்லும் நாட்கள்  அப்பாவிற்கு தெரியாமல் அம்மா கொடுக்கும் எட்டனா. அம்மாவுக்கு தெரியாமல் அப்பா கொடுப்பார் எட்டனா. ஆக மொத்தம் ஒரு ரூபாய். இடையில் அண்ணன், அக்காவிடமும்  அடேங்கப்பா ஏகப்பட்ட சந்தோசம். பள்ளிக்கு அருகில் பஜார்  டீ கடை. ஐஸ் சைக்கிள் பேக்கரியில் பிரட் கமர்கட்டு  ...

இன்னொரு மாஞ்சோலை ஆக மாறுகிறதா வால்பாறை..!!!

  இன்னொரு மாஞ்சோலை ஆக மாறுகிறதா வால்பாறை..!!! வால்பாறை மக்கள் உரிமை மீட்பு குழு கவனஈர்ப்பு கடையடைப்பு ஆர்ப்பாட்டம் என வால்பாறையில் நாளை நடத்தப்படும் ஆர்ப்பாட்டம் என்ன...? 🔴மத்திய அரசு வெளியிட்டுள்ள 29.11.2024 சுற்றுச்சூழல் உணர்திறன் மசோதா S.O.5129 (E) சுற்றுச்சூழல், துறை டெல்லி, இந்த மசோதாவால் வால்பாறை உள்ளிட்ட 183 கிராமங்களின் சமூக, பொருளாதார வாழ்வை பெரிய அளவில் பாதித்து வால்பாறை பகுதியின் எதிர் காலத்தை முற்றிலுமாக முடக்கி விடும் அபாயம் ஏற்படும் என்பதால் மத்திய, மாநில அரசின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் நம் வால்பாறை பகுதியில் 07.01.2025 அன்று 24 மணிநேர முழு கடையடைப்பும், ஆர்ப்பாட்டமும் நடைபெற இருக்கிறது. பொதுமக்கள், வியாபாரிகள், தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள், என அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு தந்து வால்பாறை பகுதியை அழிவில் இருந்து காக்கவும் உரிமைகளை மீட்டெடுக்கவும் அன்புடன் அழைக்கிறோம். (வால்பாறை பகுதியின் பாதிப்புகள் அபாயங்கள்:) 1. ஆழியார் செக் போஸ்ட் மாலை 6 மணிக்கு மேல் மூடப்படும், 2. தனியார், சுற்றுலா, கனரக வாகனங்கள், போக்குவரத்து மற்றும் அதனை சார்ந்த ஓட்டுநர்கள், ஊழியர்கள், ஓர்க்சாப்...

அரும்பு பருவம்

 அரும்பு பருவம் நனை, முகை, மொக்குள் என மூன்று பிரிவாக பெயர் குறிப்பிடப்படுகிறது. அதாவது அரும்பும் நிலைக்கு அரும்பு எனப் பெயர். நனை - அரும்பு வெளியில் தலை காட்டும் நிலை, முகை - தலைகாட்டிய அந்த அரும்பு முத்தாக மாறும் நிலை. மொக்குள் - பூவுக்குள் மணம் பெறக்கூடிய நிலை. இப்படி பல பிரிவுகளாக அரும்பு, நனை, முகை, மொக்குள், முகிழ், மொட்டு, போது, மலர், பூ, வீ, பொதும்பர், பொம்மல், செம்மல் என 13 பெயர்களில் தனித்தனியாகவும் சங்க இலக்கியப் பாடல்களில் பூக்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதில், செடியில் பூக்கள் பூத்துக் குலுங்கி நிற்கும் நிலை 'பொதும்பர்' என குறிப்பிடப்படுகிறது. செடியில் இருந்து கீழே தரையில் உதிர்ந்து கிடக்கும் பூக்கள் 'பொம்மல்' எனக் குறிப்பிடப்படுகிறது. இடம், பொருள், சூழலுக்கேற்ப ஒரு பொருளைக் குறிப்பிட தமிழ் மொழியில் தான் எவ்வளவு அழகிய பெயர்கள்? தமிழ் வளர்ப்போம்...!

நட்பு

 நட்பு உடைந்து முகநூலானது ... சுற்றம் உடைந்து வாட்சப் ஆனது ... வாழ்த்துக்கள் உடைந்து ஸ்டேட்டஸ் ஆனது ... உணர்வுகள் உடைந்து ஸ்மைலியாய் ஆனது ... குளக்கரை உடைந்து குளியலறை ஆனது ... நெற்களம் உடைந்து கட்டடமானது ... காலநிலை உடைந்து வெப்ப மயமானது ... வளநிலம் உடைந்து தரிசாய் ஆனது ... துணிப்பை உடைந்து நெகிழியானது ... அங்காடி உடைந்து அமேசான் ஆனது ... விளைநிலம் உடைந்து மனைநிலம் ஆனது ... ஒத்தையடி உடைந்து எட்டு வழியானது ... கடிதம் உடைந்து இமெயிலானது ... விளையாட்டு உடைந்து வீடியோ கேம் ஆனது ... புத்தகம் உடைந்து  இ-புக் ஆனது ... சோறு உடைந்து 'ஓட்ஸ்'சாய்ப் போனது... இட்லி உடைந்து  பர்கர் ஆனது ... தோசை உடைந்து பிட்சாவானது ... குடிநீர் உடைந்து குப்பியில் ஆனது ... பசும்பால் உடைந்து பாக்கெட் ஆனது ... வெற்றிலை உடைந்து பீடாவானது ... தொலைபேசி உடைந்து கைபேசியானது ... வங்கி உடைந்து  பே டி எம் ஆனது ... நூலகம் உடைந்து கூகுளாய்ப் போனது ... புகைப்படம் உடைந்து செல்ஃபியாய் ஆனது ... மனிதம் உடைந்து மதவெறியானது ... அரசியல் உடைந்து அருவெறுப்பானது ... பொதுநலம் உடைந்து சுயநலமானது ... பொறுமை உடைந்து அவசரமான...

வால்பாறை இதில் அழகு

 மேற்குத் தொடர்ச்சி மலை உருவாக்கத்தையும் அதன் சிறப்புகளையும் அறிந்து கொள்வோம்... குஜராத் மாநிலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகள் உருவாகிறது அங்கிருந்து மகாராஷ்டிரா கோவா கர்நாடகா வழியாக தமிழ்நாடு கேரளா எல்லையில் முடிவடைகிறது... மேற்கு தொடர்ச்சி மலைகளின் மொத்த நீளம் சுமார் 1600 கிலோமீட்டர் தூரம் ஆகும்‌ உலகத்தில் உள்ள எந்த மலைகளுக்கும் இல்லாத சிறப்பு மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு மட்டுமே உண்டு.. மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும்தான் சோலை காடுகள் மூலம் சுனைகள் உருவாகி அதன் மூலம் நீர் கசிந்து அந்த நீர் ஓடைகளாக உருவாகி அது அருவியாகவும் ஆறாகவும் பாய்ந்தோடுகிறது.. மேற்கு தொடர்ச்சி மலைகள் பலவகையான கனிம வளங்களை கொண்டுள்ளது பல்லுயிர்கள் வாழும் இடமாக விளங்குகிறது... மேற்கு தொடர்ச்சி மலைகளை யுனெஸ்கோ அமைப்பு இந்தியாவின் பொக்கிஷமாக அறிவித்துள்ளது... நாமும் அந்த பொக்கிஷத்தை பாதுகாப்போம்.

வால்பாறை ஊரும், பேரும்...!!!

Welcome to Valparai… வால்பாறை ஊரும், பேரும்...!!! பெயர் காரணம் என்னவா இருக்கும், வால் இல்லாத ஊருக்கு ஏன் இந்த பேரு..!!! சின்னதா தகவல்  சிலு சிலு என்று வீசும் காற்று, காட்சி எங்கும் பசுமை, தென் அமெரிக்காவின் கிராஃபிட்டி தலைநகரங்களில் ஒன்றாக Valparaiso சிலி கருதப்படுகிறது சிலியின் முக்கிய நகரமான வால்பாரைசோவ் (Valparaíso City in Chile) இதன் முக்கியகாரணமாம், மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் வால்பாறையின்  முந்தைய பெயர் பூனாச்சி மலை,  சிலி நாட்டின் முக்கிய கடற்கரை நகரமான வால்பெய்ரசோவ் இது போன்று இந்த ஊர் இருந்ததால் ஆங்கிலேயர்கள் இந்தப் பெயர் வைத்துள்ளார்கள் என்பது தகவல்  வல்பெய்ரசோவ் என்ற பெயர் மருவி  வால் பாறை ஆனதாக கூறப்படுவது , இன்னும் நாம் எங்கெல்லாம் வால்பாறை என்று tag செய்தாலும் அப்பெயர் வந்து தான் செல்கிறது, ஆங்கிலேயன் காலத்தில் #கார்வர்_மார்ஷ்” என்ற அறிஞன் ஆனைமலை காடுகளுக்குள் ஓர் ஊர் இருப்பதை கண்டு தேடி வந்தார். அந்த ஊர் யாருமற்ற புல்வெளியாக, மரங்களின் அற்புத வனமாக மலை சரிவின் ஆத்மார்த்தமாக இருந்தது. மலையை வெட்டி வெட்டி சாலை போட்டார். வளைந்து வளைந்து மேல...